திருவாரூர் நகரம், கொடிக்கால்பாளையத்தில், நேற்று பிப்ரவரி 27, 2013, புதன்கிழமை மதியம் 2.15 மணிக்கு நகராட்சி துவக்கப்பள்ளி அருகில் உள்ள குடிசை விட்டில் திடிரென தீ பிடித்தது.கற்று பலமாக விசியதால் அடுத்த உள்ள 5 குடிசை வீடுகள் தீபிடித்தது. தீ விபத்தில் 5 குடிசை விடுகள் முற்றிலும் நாசமானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்து எப்படி நடைபெற்றது என்று இதுவரை தெரியவில்லை.இந்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை மேற்க்கொண்டு வருகிறார்கள்.
5 குடிசைகளில் உள்ள அனைத்து பொருள்களும் தீக்கு இறையானது.ஓரு எரிவாயு உருளை (gas cylinder)வெடித்தது மற்ற மூன்று எரிவாயு உருளை (gas cylinder)உப்பிய நிலையில் இருக்கிறது.இரண்டு மோட்டார் சைக்களும் தீக்கு இறையானது.
ரூ6 லட்சம் மதிப்புல்ல பொருள்கள் சேதம்.உயிர் சேதம் எதுவும் இல்லை.
இந்த பயங்கர தீ விபத்தில் இறைவனுடைய திருமறை வசனங்கள் (குர்-ஆன்) மட்டும் எறியவில்லை இறைவனால் பாதுகாக்கப்பட்டுள்ளது.எல்லா புகழும் இறைவனுக்கே.
கொடிக்கால்பாளையத்தில் இதை போன்று ஓரு பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில்லை இதுவே முதல் முறையாகும்.
விடுகளை இழந்து,உடமைகளை இழந்துவர்களை நமதூர் நகரட்சி துவக்கப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களுக்கு உணவு,உடை மற்றும் வாழ்வதற உதவிகள் நமதூர் நல் உள்ளம் கொண்டவர்கள் அவர்களுக்கு செய்து வருகின்றனர்.
2:07 AM | 0
comments